ஆப்நகரம்

Rahul Gandhi: கேரளாவுக்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார் ராகுல் காந்தி!

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று செல்ல உள்ளார்.

Samayam Tamil 28 Aug 2018, 2:58 pm
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டகேரள மாநிலத்திற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்றுசெல்ல உள்ளார்.
Samayam Tamil 677318-rahul-gandhi


கேரளாவில்பெய்த கனமழை காரணமாக, 350 மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத மழையால் கேரள மாநிலம் கடும் சேதத்தைசந்தித்துள்ளது.

வெள்ளம் வடிந்தாலும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டால் குணப்படுத்தவும் 24 மணி நேர மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது.வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அண்டை மாநிலங்கள் தொடர்ந்து உதவி வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரிசி, தானியங்கள், பிஸ்கட், உள்ளாடைகள், புதிய துணிகள் ஆகியநிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில்கேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிடகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செல்ல உள்ளார்.இரண்டு நாட்கள் பயணமாக செல்லும் ராகுல் காந்தி, தன்னலம் கருதாமல் பொதுமக்களுக்கு உதவிய மீனவர்கள், தன்னார்வலர்களை சந்திக்க உள்ளார்.மேலும் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும்பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

அடுத்த செய்தி