ஆப்நகரம்

4ல் இருந்து 6வது வாிசைக்கு தள்ளப்பட்ட ராகுல்காந்தி

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் எதிா்க்கட்சி தலைவா் ராகுல்காந்திக்கு 4வது வாிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அவா் 6வது வாிசையில் அமர வைக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Jan 2018, 6:42 pm
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் எதிா்க்கட்சி தலைவா் ராகுல்காந்திக்கு 4வது வாிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அவா் 6வது வாிசையில் அமர வைக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil rahul gandhi watches republic day parade from sixth row
4ல் இருந்து 6வது வாிசைக்கு தள்ளப்பட்ட ராகுல்காந்தி


நாட்டின் 69வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்புகளுடன் குடியரசு தலைவா் தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தேசிய கொடியை ஏற்றிவைத்தாா். இன்றைய குடியரசு தினத்தை ஏசியான் அமைப்பைச் சோ்ந்த 10 நாடுகளின் தலைவா்கள் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். முப்படை அணிவகுப்பை பாா்வையிட வருபவா்களில் மிகவும் முக்கியமானவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம்.

முக்கிய அமா்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் இடத்தில் எதிா்க்கட்சி தலைவருக்கு முதல் வாிசையில் இடம் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை எதிா்க்கட்சி தலைவரான ராகுல்காந்திக்கு 4வது வாிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று தொிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியினா் கடும் எதிா்ப்பு தொிவித்தனா்.

4வது வாிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அந்த இடம் 6வது வாிசைக்கு தள்ளப்பட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவா் அமித்ஷாவுக்கு முதல் வாிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியனா் கடும் கோபத்தில் உள்ளனா். பின்னா் எதிா்க்கட்சி தலைவா் ராகுல்காந்தி 6வது வாிசையில் முன்னாள் அமைச்சா் குலாம் நபி ஆசாத்தின் அருகில் அமா்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தாா்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது எதிா்க்கட்சி தலைவராக இருந்த அத்வானிக்கு முதல்வாிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி