ஆப்நகரம்

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, சிறப்பாக வழிநடத்துவார் ராகுல்; மன்மோகன் சிங் நம்பிக்கை!

காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி சிறப்பாக வழி நடத்துவார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

TNN 16 Dec 2017, 12:59 pm
டெல்லி: காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி சிறப்பாக வழி நடத்துவார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil rahul gandhi will lead congress in good way says manmohan singh
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, சிறப்பாக வழிநடத்துவார் ராகுல்; மன்மோகன் சிங் நம்பிக்கை!


காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமைகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி 19 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்தி வந்தார்.

அவரது வழிகாட்டுதலில் தான், காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது. அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% என்ற அளவில் சிறப்பாக இருந்தது.

நமது காங்கிரஸ் ஆட்சியில் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இன்று முக்கியமான நாள்.

நான் உணர்ச்சி வசப்பாட்டால் மன்னித்துக் கொள்ளவும். புதிய தலைவராக பதவியேற்ற ராகுலுக்கு எனது வாழ்த்துக்கள். நீண்ட காலமாக அரசியல் பயிற்சியில் இருந்தவர்.

அவர் கட்சியை சிறப்பாக வழி நடத்துவார். ஏராளமான சிக்கல்கள் நம்முன் காணப்படுகிறது. அவற்றை திறம்பட ராகுல் எதிர்கொள்வார் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Rahul Gandhi will lead Congress in good way says Manmohan Singh.

அடுத்த செய்தி