ஆப்நகரம்

கேரள முதல்வருக்கு ராகுல் அவசர கடிதம்...இதுதான் விஷயம்!!

கேரள மாநிலம், வயநாடு அருகே அரசுப் பள்ளியில் பாம்பு கடித்து இறந்த மாணவியின் குடும்பத்துக்கு உரிய நிதியுதவி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 21 Nov 2019, 9:49 pm
கேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அப்துல் அஜிஸ். இவரது மனைவி சாஜனா. இவரும் வழக்கறிஞராக உள்ளார். இவர்களது மகள் ‌ஷகாலா (10). இவர் சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil pvrg


இந்த நிலையில் புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு மாணவி ‌ஷகாலா பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். வகுப்பறையில் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் இருந்த பாம்பு ‌ஷகாலாவை கொத்தியது தான் அவர் மயங்கி விழுந்ததற்கு காரணம் எனத் தெரிய வந்தது.

தகவலறிந்து பள்ளிக்கு பதறி அடித்து வந்த ‌ஷகாலாவின் பெற்றோர், தங்களது மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஷகாலா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு அதிர்ச்சி அளித்த பாம்பு - மீளாத் துயரில் ஆழ்த்திய சம்பவம்!

இந்த நிலையில், பாம்பு கடித்து இறந்த 10 வயது சிறுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பினராயி விஜயனுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "பாம்பு கடித்து உயிரிழந்த 10 வயது சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி