புதுதில்லி: பிரதமர் மோடிக்கு ஜனநாயகத்தை விளக்கிய உச்ச நீதிமன்றத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் நன்றி தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அதிருப்தி தெரிவித்து தனித்து செயல்பட்டதால் அங்கு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் கடந்த மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து, நபம் துகி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ கலிகோ புல் தலைமையில் 31 எம்எல்ஏ-க்கள் கடந்த திங்கள்கிழமை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினர். அவர்களில் 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், 11 பாஜக எம்எல்ஏ-க்கள், 2 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் அடங்குவர்.
அதனையடுத்து, அருணாச்சல்பிரதேசத்தில் புதிய அரசு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. தற்போதுள்ள நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அருணாச்சலில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றது.
அதாவது, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது, நபம் துகியின் அமைச்சரவையை கலைத்தது செல்லாது, ஆளுநரின் உத்தரவு எதுவும் செல்லாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பால் நபம் துகி மீண்டும் முதல்வராகவுள்ளார்.
Thank you Supreme Court for explaining to the Prime Minister what democracy is. #ArunachalPradesh — Office of RG (@OfficeOfRG) July 13, 2016
இநிலையில், பிரதமர் மோடிக்கு ஜனநாயகத்தை விளக்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அதிருப்தி தெரிவித்து தனித்து செயல்பட்டதால் அங்கு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் கடந்த மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து, நபம் துகி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ கலிகோ புல் தலைமையில் 31 எம்எல்ஏ-க்கள் கடந்த திங்கள்கிழமை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினர். அவர்களில் 19 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள், 11 பாஜக எம்எல்ஏ-க்கள், 2 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் அடங்குவர்.
அதனையடுத்து, அருணாச்சல்பிரதேசத்தில் புதிய அரசு அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. தற்போதுள்ள நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அருணாச்சலில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றது.
அதாவது, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது, நபம் துகியின் அமைச்சரவையை கலைத்தது செல்லாது, ஆளுநரின் உத்தரவு எதுவும் செல்லாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பால் நபம் துகி மீண்டும் முதல்வராகவுள்ளார்.
Thank you Supreme Court for explaining to the Prime Minister what democracy is. #ArunachalPradesh — Office of RG (@OfficeOfRG) July 13, 2016
இநிலையில், பிரதமர் மோடிக்கு ஜனநாயகத்தை விளக்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.