ஆப்நகரம்

இனி வருகை பதிவுக்கு ஆதார் கட்டாயம்: ரயில்வே ஊழியர்கள் ஷாக்

ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வராமல் தடுக்கவும், உரிய நேரத்துக்கு வருவதற்காகவும் ரயில்வே வாரியம் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

TNN 6 Nov 2017, 5:35 pm
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வராமல் தடுக்கவும், உரிய நேரத்துக்கு வருவதற்காகவும் ரயில்வே வாரியம் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
Samayam Tamil railway announced to implement aadhar in attendance of the workers
இனி வருகை பதிவுக்கு ஆதார் கட்டாயம்: ரயில்வே ஊழியர்கள் ஷாக்


இந்திய ரயில்வே துறை நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த துறையில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்வதோடு, நிர்வாக சீர்கேடுகளும் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவது, வேலை செய்யாமல் டிமிக்கி கொடுப்பது எனக் கூறப்படுகிறது.

இதைத் தடுக்கவும் ஊழியர்களை சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதை உறுதி செய்யவும் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை தொடங்கவுள்ளது.

இந்த மாதம் 30-ந் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகைப் பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து ரயில்வே மண்டலங்களிலும், அலுவலகங்களிலும் வரும் ஜனவரி 31-ந் தேதிக்குள் இந்த வருகை பதிவு முறை அமலுக்கு வந்து விடும்.

railway announced to implement aadhar in attendance of the workers

அடுத்த செய்தி