ஆப்நகரம்

ஜூன் 1 முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்: இந்த முறை டிக்கெட் ரேட் கம்மி!

ஏசி வசதியுடன் கூடிய குளிர்சாதன ரயில்களை மட்டுமே இயக்கி வந்த இந்திய ரயில்வே, இந்த முறை அசத்தல் அறிவிப்பு...

Samayam Tamil 19 May 2020, 11:35 pm
ஜூன் ஒன்றாம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ஜூன் 1 முதல் 200 ரயில்கள், இந்த முறை டிக்கெட் ரேட் கம்மி!
ஜூன் 1 முதல் 200 ரயில்கள், இந்த முறை டிக்கெட் ரேட் கம்மி!


அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுத் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அறிவிக்கப்படும் ரயில்கள் பயன்பாட்டிலிருக்கும் அட்டவணைப்படி இயக்கப்படும். இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் ஆன்லைனில் விற்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில்கள் டிக்கெட் விற்பனை தொடங்கப்படும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்திய ரயில்வே நாடு முழுவதிலும் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரை மீட்கச் சிறப்பு ரயில்களை இயக்கியது. இந்த ரயில்கள் அனைத்தும் ஏசி வசதியுடன் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

3 மாதங்களுக்காவது வரி விலக்கு வேண்டும்... லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

இதேபோல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கான டிக்கெட்களும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து மக்கள் பெற முடியும் என ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

4ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை 2 மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் காரணமாக ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவுக்கு வருகிறதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி