ஆப்நகரம்

ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா!!

நாட்டில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து மூன்று ரயில் விபத்துக்கள் நடந்து பலர் உயிழந்துள்ள நிலையில், இதற்கு பொறுப்பு ஏற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

TOI Contributor 23 Aug 2017, 3:10 pm
நாட்டில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து மூன்று ரயில் விபத்துக்கள் நடந்து பலர் உயிழந்துள்ள நிலையில், இதற்கு பொறுப்பு ஏற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Samayam Tamil railway minister suresh prabu resigned after taking moral responsibility of rail accident
ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா!!


நாட்டில் அண்மையில் தொடர்ந்து இரண்டு ரயில் விபத்துக்கள் நடந்தது. இந்த விபத்துக்களுக்கு பொறுப்பு ஏற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாகவும், காத்திருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இதை தனது டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ''கடந்த 3 ஆண்டுகளாக நான் கடுமையாக உழைத்து ரயில்வேயின் நலனுக்கு உழைத்துள்ளேன். பிரதமர் தலைமையில் நான் ரயில்வேயின் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்தேன். நவீன தொழில்நுட்பத்துடன் ரயில்வே முன்னேற்றப் பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
I met the Hon'ble Prime Minister @narendramodi taking full moral responsibility. Hon’ble PM has asked me to wait. (5/5) — Suresh Prabhu (@sureshpprabhu) August 23, 2017 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, ஹைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.40 மணிக்கு விபத்தை சந்தித்தது. இந்த விபத்தில், ரயில் இன்ஜினுடன் சேர்த்து 10 பெட்டிகள் தடம் புரண்டன. 100 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், 23 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Railway minister Suresh Prabu resigned after taking moral responsibility of rail accident

அடுத்த செய்தி