ஆப்நகரம்

ரயில் பயண விபத்து: நிவாரணத் தொகை அதிகரிப்பு

ரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

TOI Contributor 27 Dec 2016, 2:02 am
புதுதில்லி: ரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil railways hikes relief from rs 4 lakh to rs 8 lakh in case of death
ரயில் பயண விபத்து: நிவாரணத் தொகை அதிகரிப்பு


ரயில்வே சட்டப்பிரிவு 1989-ன் கீழ் வரும் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, நிவாரணத் தொகையை இரட்டிப்பாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ரயில் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் திருத்தச் சட்டம் 2016-ன் கீழ், ரயில் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையானது ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் எனவும், இது குறித்த அறிவிப்பு வருகிற ஜனவரி மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையானது விபத்தில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும். அதேபோல் விபத்தில் சிக்கி கை, கால் இழந்தவர்கள், கண் பார்வை, செவி திறனை முற்றிலும் இழந்தவர்கள், முகம் கடுமையான சேதத்திற்குள்ளானவர்கள் உள்ளிட்டோருக்கும், விசாரணைக்கு பின்னர் ரூ.8 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Railways hikes relief from Rs 4 lakh to Rs 8 lakh in case of death

அடுத்த செய்தி