ஆப்நகரம்

அவங்க செய்றது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு: ரயில்வே அமைச்சர் புலம்பல்!!

சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணிக்கு ரயில்களை மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுத்துவரும் மேற்கு வங்க அரசின் செயல்பாடு மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருப்பதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வேதனை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 May 2020, 12:27 am
பொதுமுடக்கம் அமலில் உள்ளதையடுத்து, பணிநிமித்தமாக பல்வேறு மாநிலங்களில் வசித்துவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வசதியாக மத்திய அரசு ரயில் பயண சேவை வழங்கி வருகிறது.
Samayam Tamil migrant workers


மத்திய அரசின் இந்த முடிவு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறிவரும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள், இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விருப்பப்படியே இந்த ரயில் பயண சேவை வழங்கப்படுகிறது எனக்கூறி, தமது இந்த முடிவை கைவிட மத்திய அரசுமறுத்துவிட்டது.

விமான போக்குவரத்து: போர்டிங் பாஸ் நடைமுறையில் அதிரடி மாற்றம்!

இதையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுமந்துவரும் ரயில்கள், மாநிலத்துக்குள் நுழைய மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் முறையான அனுமதி அளிக்கவில்லை என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, " புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக, இரண்டே இரண்டு ரயில்கள் மட்டும் மாநிலத்துக்குள் வர மேற்கு வங்க அரசு முதலில் அனுமதி அளித்தது.

Passenger Trains: ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் ரத்து?

அதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டதையடுத்து, 8 ரயில்களுக்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்தது, ஆனால் வியாழக்கிழமை மதியம் வரை, 5 ரயில்களுக்கு மட்டுமே மாநிலத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

30 நாட்களில் மொத்தம் 105 ரயில்களை மாநிலத்துக்குள் நுழைய அனுமதி அளிப்பதற்கு பதிலாக, தினமும் 105 ரயில்களை மாநிலத்துக்குள் வந்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி