ஆப்நகரம்

கேரள அரசு - ரயில்வே கூட்டுத் தொழில் ஒப்பந்தம்

ரயில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக கேரள அரசுடன் ரயில்வே, இணைந்துள்ளது.

TOI Contributor 2 Sep 2016, 2:27 am
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த கேரள அரசின் ரயில் உள்கட்டமைப்பு வசதிக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. ரயில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக கேரள அரசுடன் இணைந்து செயலாற்ற ரயில்வே ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், கொச்சி மற்றும் எர்னாகுளம் ரயில் நிலையங்களை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil railways signs agreement with kerala government to develop rail infrastructure
கேரள அரசு - ரயில்வே கூட்டுத் தொழில் ஒப்பந்தம்


ரயில் திட்டங்களை துரிதப்படுத்த, ஆகும் செலவுகளை சமாளிக்க கிட்டத்தட்ட 10 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. சில மாநில அரசுகள் நிலங்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. இதேபோல், ஒரிசா, ஹரியானா, சட்டீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் ரயில்வேயுடன் இணைந்து கூட்டுத் தொழில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கேரள அரசின் ரயில் உள்கட்டமைப்பு வசதிக்கு ரயில்வே பட்ஜெட் செலவு தொகை ரூ.821 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி