ஆப்நகரம்

4 நாட்களுக்கு தொடர் மழை - மக்கள் கவனமாக இருக்க கேரள முதல்வர் வேண்டுகோள்!!

கேரள மாநிலத்தில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Samayam Tamil 15 Aug 2018, 5:55 pm

கேரள மாநிலத்தில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளவில் கடந்த சில தினங்களாக அதிகனமழை பெய்துவருகிறது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கியமான அணைகள் நிரம்பி உள்ளதால், எல்லா அணைகளும் திறக்கப்பட்டு வருகிறது. கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதிகனமழையினால் கேரளவில் உள்ள 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil page-72

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில்’ மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் . பக்கத்தில் இருக்கும் மாநிலங்கள் எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. எதிர்காலத்திலும் அவர்களது உதவி எங்களுக்குத் தேவை. இதுவரை கேரள வரலாற்றில் இப்படி ஒரு கனமழை பெய்தது கிடையாது . எல்லா அணைகளும் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் மூழ்கி உள்ளதால் , குடிநீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. என்று அவர் கூறினார்.

அடுத்த செய்தி