ஆப்நகரம்

ஆற்றில் பஸ் கவிழ்ந்து 24 பேர் பலி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா - டவ்சா நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் தனியார் பஸ் கவிழ்ந்ததில் 24 பேர் பலியாயினர்.

Samayam Tamil 26 Feb 2020, 1:25 pm
ராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி மாவட்டத்தில் உள்ள சவாய் மதோபூரில் இருந்து கோடாவுக்கு இன்று காலை 28 பேர் தனியார் பஸ்ஸில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தனர். பஸ் கோடா - டவ்சா நெடுஞ்சாலையில் பாப்டி கிராமம் அருகே ஆற்றின் மீது இருக்கும் மேம்பாலத்தில் சென்றது.
Samayam Tamil ராஜஸ்தான் பஸ் விபத்தில் 24 பேர் பலி


அப்போது பஸ் ஓட்டுநர் தனது கட்டுப்பாடை இழந்தார். இதில் அருகில் இருந்த மேஜ் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 24 பேர் பலியாயினர். மேம்பாலத்தில் சுற்றுச் சுவர் இல்லாததால் இந்த விபத்து நடந்து இருப்பதாக லகேரி போலீஸ் எஸ்ஐ ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் விழுந்தவர்களை மீட்க அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உதவினர். மீட்கப்பட்டவர்கள் லகேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: மசூதி உச்சியில் காவிக் கொடி பறந்த வீடியோ, பின்னணி என்ன?

அடுத்த செய்தி