ஜெய்பூர்: மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் சல்மான் கானுக்கு விடுதலையளிக்கப்பட்டதை எதிரித்து ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1998–ம் ஆண்டு இந்தி நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மான் வேட்டையில் ஈடுபட்டதாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் சல்மான் கானுக்கு ஒரு வழக்கில் ஓராண்டு சிறையும் மற்றொரு வழக்கில் 5 ஆண்டு சிறையும் விதித்து கடந்த 2006ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்ட்டது. இதனை எதிர்த்து சல்மான் கான் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி சல்மான் கானை விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பு வெளியானதும், இந்த வழக்கில் ஒரே சாட்சியான சல்மான் கானின் ஜீப் ஓட்டுநர், தனக்கு பாதுகாப்பு வழங்கினால் சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில உள்துறை மந்திரி குலாப் காந்த் கதாரியா சல்மான் கானின் ஓட்டுனருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவோம் என்று உறுதியளித்துள்ளார். சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1998–ம் ஆண்டு இந்தி நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மான் வேட்டையில் ஈடுபட்டதாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் சல்மான் கானுக்கு ஒரு வழக்கில் ஓராண்டு சிறையும் மற்றொரு வழக்கில் 5 ஆண்டு சிறையும் விதித்து கடந்த 2006ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்ட்டது. இதனை எதிர்த்து சல்மான் கான் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி சல்மான் கானை விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பு வெளியானதும், இந்த வழக்கில் ஒரே சாட்சியான சல்மான் கானின் ஜீப் ஓட்டுநர், தனக்கு பாதுகாப்பு வழங்கினால் சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில உள்துறை மந்திரி குலாப் காந்த் கதாரியா சல்மான் கானின் ஓட்டுனருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவோம் என்று உறுதியளித்துள்ளார். சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.