ஆப்நகரம்

ராஜஸ்தானில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 29 Jun 2022, 12:17 pm
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
Samayam Tamil உதய்பூர் கலவரம்
உதய்பூர் கலவரம்


இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், கவுஸ் முகமது ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லாலை அவர்கள் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதுமே பதற்றமாக இருக்கிறது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள், மோதல்கள் வெடித்து வருகின்றன. அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெல்லாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல்!
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், கலவரம், வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வேறு அமைப்புகள் அல்லது சர்வதேச தொடர்புகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி