ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது மின்னணு பொருட்களை சந்தை விலையை விட, மிகக் குறைவான விலைக்கு விற்க முடிவு செய்துள்ளது.
இதற்காக மலிவு விலை அங்காடிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. முதல்கட்டமாக ஜெய்ப்பூரில் 5 மல்டி பிராண்ட் அங்காடிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் நுவரு சாலை, கோபல்பூரா, நிர்மான் நகர், மன்சாரோவார் உள்ளிட்ட இடங்களில் மல்டி பிராண்ட் அங்காடி திறக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அங்காடியில் வீட்டு உபயோக சாதனங்களை உள்ளடக்கிய மின்னணு பொருட்கள் கிடைக்கும். முன்னதாக நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் சாம்சங், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான மின்னணு பொருட்களும் கிடைக்கின்றன. இருப்பினும் புதிதாக திறக்கப்படும் அங்காடிகள் மூலம் மிகக் குறைந்த விலையில் மின்னணு பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மலிவு விலை அங்காடிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. முதல்கட்டமாக ஜெய்ப்பூரில் 5 மல்டி பிராண்ட் அங்காடிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் நுவரு சாலை, கோபல்பூரா, நிர்மான் நகர், மன்சாரோவார் உள்ளிட்ட இடங்களில் மல்டி பிராண்ட் அங்காடி திறக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அங்காடியில் வீட்டு உபயோக சாதனங்களை உள்ளடக்கிய மின்னணு பொருட்கள் கிடைக்கும். முன்னதாக நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் கூட்டமைப்பு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் சாம்சங், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான மின்னணு பொருட்களும் கிடைக்கின்றன. இருப்பினும் புதிதாக திறக்கப்படும் அங்காடிகள் மூலம் மிகக் குறைந்த விலையில் மின்னணு பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.