ஆப்நகரம்

சச்சின் பைலட்டின் எம்எல்ஏ பதவி தப்புமா? -நாளை தெரிந்துவிடும்!!

தங்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ள, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி கொறடாவின் பரிந்துரையை எதிர்த்து, சச்சின் பைலட் உள்ளி்ட்ட 20 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையை அந்த மாநில உயர் நீதிமன்றம் நாளைக்கு (ஜூலை 17) ஒத்திவைத்துள்ளது.

Samayam Tamil 16 Jul 2020, 9:26 pm
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி ஆகியவை பறிக்கப்பட்டன.
Samayam Tamil sachin pilot


அத்துடன் அவரும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கொறடா, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

இதுகுறித்து இரண்டு நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு சபாநாயகர் நேற்று (ஜூலை 15) நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல்: ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்

இந்த நிலையில், சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக, சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்றிரவு விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் தரப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி வாதாடினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

கட்சி கொறடா புகாருக்கு உரிய விளக்கம் அளிக்கக் கோரி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் சபாநாயகர் விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி