ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்று எம்எல்ஏ பதவிக்குத் தேர்வான பாஜகவின் கல்யாண் சிங் சவுகான் காலமானார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோத்பூர் மாவட்டம் நத்வாரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கல்யாண் சிங் சவுகான். இவர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷியை தோற்கடித்து எம்எல்ஏ ஆனார்.
இரண்டு முறை எம்எல்ஏ பதவியை வகித்துள்ள இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கிராமப் பஞ்சாயத்துத் தலைவரானதில் இருந்து இவரது அரசியல் பயணம் தொடர்கிறது. 2005ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார்.
கல்யாண் சிங் மறைவினால் அம்மாநில சட்டப்பேரவையில் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 159 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோத்பூர் மாவட்டம் நத்வாரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கல்யாண் சிங் சவுகான். இவர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷியை தோற்கடித்து எம்எல்ஏ ஆனார்.
இரண்டு முறை எம்எல்ஏ பதவியை வகித்துள்ள இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கிராமப் பஞ்சாயத்துத் தலைவரானதில் இருந்து இவரது அரசியல் பயணம் தொடர்கிறது. 2005ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார்.
கல்யாண் சிங் மறைவினால் அம்மாநில சட்டப்பேரவையில் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 159 ஆகக் குறைந்துள்ளது.