ஆப்நகரம்

குடிபோதையில் கார் ஓட்டிய எம்.எல்.ஏ மகன் - 3 பேர் பலி

சுயேட்சை எம்.எல்.ஏவின் மகன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், ஆட்டோவில் வந்த 3 பேர் பலியாகினர்.

TNN 2 Jul 2016, 2:21 pm
ஜெய்ப்பூர்: சுயேட்சை எம்.எல்.ஏவின் மகன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில், ஆட்டோவில் வந்த 3 பேர் பலியாகினர்.
Samayam Tamil rajasthan mlas son car hit accident 3 killed
குடிபோதையில் கார் ஓட்டிய எம்.எல்.ஏ மகன் - 3 பேர் பலி


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ நந்திக்‌ஷோர் மெஹாரை. இவரது மகன் சித்தார்த்தா மெஹாரியா. இவர் தனது பி.எம்.டபிள்யு காரை குடிபோதையில் ஓட்டிச் சென்றுள்ளார்.

ஜெய்ப்பூரின் சி பிரிவு பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். முன்னதாக காவல்துறையினரின் பிசிஆர் வாகனத்தின் மோதியதில் 4 காவலர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சித்தார்த்தா மெஹாரியாவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி