ஆப்நகரம்

மருமகளுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தந்த மாமியார் !

ராஜஸ்தான் மாநிலத்தில், மருமகளுக்கு தனது சிறுநீரகத்தை மாமியார் தானமாக கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 6 Oct 2018, 4:34 pm
ராஜஸ்தான் மாநிலத்தில், மருமகளுக்கு தனது சிறுநீரகத்தை மாமியார் தானமாக கொடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil kidney_transplant


ராஜஸ்தான் மாநிலத்தில்ஜெய்சல்மர் நகரை சேர்ந்தவர் சோனிகா(32). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவியுன் அதே பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் சோனியாவுக்கு சிறுநீரக கோளாறுஏற்பட்டுள்ளது. மேலும் இவரது இரண்டு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சோனியா அடிக்கடி டயாலிஸிஸ் செய்து வந்தார். மேலும் அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சோனியாவின் தாய், தந்தை மற்றும் சகோதரரின் சிறுநீரகம் சோனியாவுக்கு பொருந்திய நிலையிலும்,அவர்கள் கொடுக்க முன்வரவில்லை. இதனையடுத்துசோனியாவின் மாமியார் தனது சிறுநீரகத்தை மருமகளுக்கு கொடுக்க முன்வந்தார்.

இதனையடுத்து சோனியாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.அறுவை சிகிச்சை நடைபெற்று குணமடைந்து வரும் சோனியா கூறுகையில் ‘’என் மாமியாருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். அவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி