ஆப்நகரம்

சிறாா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் தூக்கு – புதிய மசோதா

பன்னிரெண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கற்பளிக்கும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் புதிய மசோதா ஒன்று ராஜஸ்தான் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Mar 2018, 11:23 pm
பன்னிரெண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கற்பளிக்கும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் புதிய மசோதா ஒன்று ராஜஸ்தான் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil rajasthan passes bill to award death penalty for those who rape girls under 12 years of age
சிறாா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் தூக்கு – புதிய மசோதா


தேசிய குற்ற ஆவணம் 2016ம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகாித்துள்ளது தொிய வந்துள்ளது. 2016ம் ஆண்டு மட்டும் சிறாா்களுக்கு எதிரான குற்றம் தொடா்பாக 4 ஆயிரத்து 34 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதற்கு முந்தைய ஆண்டில் 3 ஆயிரத்து 689 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே சிறாா்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழி செய்யும் சட்டம் மத்திய பிரதேச சட்டப் பேரவையில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் சட்டப் பேரவையில் அம்மாநில அமைச்சா் குலாப் சாந்த் காதாரியா மத்திய பிரதேசத்தைப் போன்று ராஜஸ்தானிலும் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்று தொிவித்தாா்.

அதன் அடிப்படையில் இது தொடா்பான சட்ட மசோதா தயாாிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின்னா் இந்த மசோதா சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அடுத்த செய்தி