ஆப்நகரம்

மருந்துகளை பரிசோதிக்க, சோதனை எலிகளாக மாற்றப்பட்ட கூலித் தொழிலாளி இந்தியர்கள்!

இந்தியர்கள் மருந்து சோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Apr 2018, 11:24 am
ஜெய்ப்பூர்: இந்தியர்கள் மருந்து சோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil Testing Rats
சோதனை எலிகள்


ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு மருந்து நிறுவனத்தின் மருந்துகள் சட்டவிரோதமாக பரிசோதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அதாவது மருந்துகளை சோதிக்க கூலித் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இவர்கள் சுரு, பிடாசர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள். சோதனைக்கு ரூ.500 தருகிறோம் என்று கூறி, தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

பின்னர் ஆய்வகங்களில் சோதனை எலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர். கடந்த மாதம் 19ஆம் தேதி, புதிய மருந்து ஒன்றின் சோதனையில் அனைவருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போது, உண்மை நிலவரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் காளி கதாம் சராப் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மற்ற நாடுகளை விட, இந்தியாவில் மருந்து சோதனைக்கு 60% செலவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


Rajasthan people used as rats to test foreign medicines.

அடுத்த செய்தி