ஆப்நகரம்

வெண்டிலேட்டர் ப்ளக்கை பிடுங்கி ஏர் கூலர் போட்ட உறவினர்... மரணித்தார் நோயாளி!

கொரோனா வார்டிலிருந்து சமீபத்தில் தனிமைப்படுத்தும் மையத்திற்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட சோகம்...

Samayam Tamil 20 Jun 2020, 11:26 am
ராஜஸ்தான் மாநிலத்தில், கொரோனா அறிகுறியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் வெண்டிலேட்டர் உதவியோடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அங்கு வெண்டிலேட்டர் ப்ளக்கை பிடுங்கிவிட்டு ஏர் கூலரை ஆன் செய்ததால் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil வெண்டிலேட்டர் ப்ளக்கை பிடுங்கி ஏர் கூலர் போட்ட உறவினர்... மரணித்தார் நோயாளி!
வெண்டிலேட்டர் ப்ளக்கை பிடுங்கி ஏர் கூலர் போட்ட உறவினர்... மரணித்தார் நோயாளி!


ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகளோடு காணப்பட்ட 42 வயதுடையவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிட்ருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த நபர் தீடிரென உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கவனக்குறைவே குறித்த நபரின் இழப்புக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினர். சிலர் மருத்துவர்களின் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்துத் தகவலறிந்து மாவட்ட சுகாதாரத் துறை கண்காணிப்பாள் நவீன் சக்சீனா விசாரணை நடத்தினார்.

வீட்டிலே சிகிச்சையா? ஒகே, இத மட்டும் மனசுல வச்சுக்கோங்க, அரசு அறிவுரை!

முதற்கட்ட விசாரணையில், சிகிச்சை பெற்று வந்த நபரைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர் வெண்டிலேட்டர் ப்ளக்கை கழட்டிவிட்டு ஏர் கூலர் ப்ளக்கை செருகியதாகத் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணை குறித்து சக்சீனா நிருபர்களிடம் கூறுகையில், “தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். மருத்துவர், உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்படும். அதனடிப்படையில் இந்த விவகாரம் போலீசுக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

அடுத்த செய்தி