ஆப்நகரம்

அற்புதம்மாளுடன் சென்று அமித் ஷாவிடம் மனு அளித்த திருமாவளவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி சிதம்பரம் மக்களைத் தொகுதி உறுப்பினர் திருமாவளவன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு வழங்கினார்.

Samayam Tamil 29 Jul 2019, 1:42 pm
சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி மனு வழங்கினார்.
Samayam Tamil ArputhammalAmitShahThiruma750


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இதே வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி தனது மகளின் திருமண தேவைக்காக ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Also Read: கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி

இந்த வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் ஏழுபேரையும் விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு அளிக்கப்பட்ட பரிந்துரை கடிதமும் எந்தவித நடவடிக்கையும் இன்றி கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் டெல்லி சென்ற சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருமாவளவன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது திருமாவளவனும், அற்புதம்மாளும் சேர்ந்து சிறையில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி மனு அளித்தனர்.

Also Read: மேயர் கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கிய காவல் துறை

இதனைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் அற்புதம்மாள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் கூறுகையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட முடியாது. ஆனால், தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட பரிந்துரை கடிதம் மீது 10 மாதங்களுக்கும் மேலாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.

எம்.பி.க்கள் வாயிலாக உள்துறை அமைச்சருக்கு மனு அளிப்பதன் மூலம் ஆளுநரிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்படும். அப்போது ஆளுநர் பதில் அளிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமித் ஷாவும் எங்கள் மனுவை பெற்றுக் கொண்டு இது தொடர்பாக துறை அதிகாரிகளை சந்தித்து அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததாக திருமாவளவன் கூறியுள்ளார்.

என்னை ஏமாற்றாதீர்கள்7 பேரை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட நிலையில் தான் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 10 மாதங்களாகியும் பரிந்துரை கடிதம் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு மேலும் என்னை ஏமாற்றாதீர்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அடுத்த செய்தி