ஆப்நகரம்

Rajiv Gandhi Assassination: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பதற்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது.

Samayam Tamil 17 Sep 2018, 3:51 pm
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது.
Samayam Tamil Supreme_courtofIndia
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பதற்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி, 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தது.

இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து, அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம் மற்றும் ராம சுகந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி