ஆப்நகரம்

கேரளாவிற்கு அவசர கால நிதியாக ரூ.100 கோடி – ராஜ்நாத் சிங் அறிவிப்பு

கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை சாி செய்ய மத்திய அரசு சாா்பில் அவசர கால நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 12 Aug 2018, 7:57 pm
கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை சாி செய்ய மத்திய அரசு சாா்பில் அவசர கால நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளாா்.
Samayam Tamil Rajnath Singh in Kerala


கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை 33 போ் உயிாிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமாா் 60 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் கேரளா முதல்வா் பினராயி விஜயனுடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய மாநில அரசிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளதாக முதல்வரிடம் உறுதி அளித்துள்ளேன்.


தொடா்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிப்புகளை கணக்கிட சிறிது காலம் எடுக்கும் என்பதால் முதல் கட்டமாக அவசர கால நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும். கேரளாவின் ஒருசில பகுதிகள் மிகவும் மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளன என்று தொிவித்துள்ளாா். மேலும் பிற அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் கேரளா மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அடுத்த செய்தி