ஆப்நகரம்

Ayodhya: அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி வழக்கு- உச்சநீதிமன்றம் இன்று விசாரணை..!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Samayam Tamil 4 Jan 2019, 10:15 am
அயோத்தி நகரில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.
Samayam Tamil அயோத்தி வழக்கு- இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்


கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து 14 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 29ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்கள் புதியதாக அமைக்கப்பட இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்தனர்.

அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி