ஆப்நகரம்

Ram janmabhoomi: அயோத்தியில் டைம்ஸ் கேப்சூலா? யாரும் நம்ப வேண்டாம்

இது பொய்யான தகவல். இதை நம்பவோ பரப்பவோ வேண்டாம். நாங்கள் டைம் கேப்சூல் எதையும் புதைக்கத் திட்டமிடவில்லை, ராம் ஜென்ம பூமி க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெளிவுபடுத்தியுள்ளார்.

Samayam Tamil 30 Jul 2020, 3:32 pm
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விளைவாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
Samayam Tamil Time capsule in ram mandir ayodhya


இந்நிலையில், அயோத்தியில் கட்ட உள்ள ராமர் கோவிலில் 200 அடி ஆழத்தில் ” டைம் கேப்சூல் ” புதைக்கப்படும் என கோவில் அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் என்பவர் கூறியதாக செய்திகள் வெளியாகி வைரலாகின. ஆனால், அது பொய்யென்றும் அப்படி ஏதும் இல்லை என்றும் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

ராமர் கோயில் குறித்த சர்ச்சைகளை இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தவிர்க்கும் விதமாக, ராமர் கோயில் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய டைம்ஸ் கேப்சூல் புதைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாயின.

சமூக வலைதளங்களிலும், இந்துத்துவ அமைப்புகளின் தனிப்பட்ட குழுக்களிலும் இந்தச் செய்தி வெகுவாகப் பகிரப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில்: உலகிலேயே மூன்றாவது பெரிய கோயிலாக வாய்ப்பு


இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் பேசிய ராம் ஜென்ம பூமி க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், " இது பொய்யான தகவல். இதை நம்பவோ பரப்பவோ வேண்டாம். நாங்கள் டைம் கேப்சூல் எதையும் புதைக்கத் திட்டமிடவில்லை. ராமர் கோயில் தொடர்பான விவரங்கள் அடங்கிய தாமிரப் பத்திரங்களை புதைக்கவே திட்டமிட்டுள்ளோம். " என்று தெளிவுபடுத்தினார்.

அடுத்த செய்தி