ஆப்நகரம்

குடியரசுத் தலைவர் டுவிட்டில் முதல் முறையாக தமிழ்!

Samayam Tamil 15 Mar 2018, 2:25 pm
முதல் முறையாக குடியரசுத் தலைவர் மடகாஸ்கர் நகரில் ஆற்றிய உரை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ட்விட்டாில் பதிவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil ram nath kovind official tweet has tamil language
குடியரசுத் தலைவர் டுவிட்டில் முதல் முறையாக தமிழ்!


குடியரசுத் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் இதுவரை இந்தி, ஆங்கிலம் ஆகிய மெழிகளில் மட்டுமே பதிவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரீசியஸ், மடகாஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர் pic.twitter.com/DYbrtc4iL4 — President of India (@rashtrapatibhvn) March 14, 2018 நேற்று மடகாஸ்கர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை, குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் மொழிபெயர்க்கபட்டு, பதிவிடப்பட்டுள்ளது.

மடகாஸ்கரில் அவர் பேசியதாவது

இந்தியா எனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது, அவர்கள் உண்மையான தூதர்களாகவும். நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி