ஆப்நகரம்

ராம் ரஹீம் மீதான இரட்டைக் கொலை வழக்கு இன்று விசாரணை

பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறை சென்ற போலிச் சாமியார் ராம் ரஹீம் சிங் மீதான இரட்டைக் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

TNN 16 Sep 2017, 1:07 pm
பஞ்ச்குலா: பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறை சென்ற போலிச் சாமியார் ராம் ரஹீம் சிங் மீதான இரட்டைக் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Samayam Tamil ram rahim jailed in rape case attends murder hearing via video link
ராம் ரஹீம் மீதான இரட்டைக் கொலை வழக்கு இன்று விசாரணை


ஹரியாணா மாநிலம் சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா என்ற இயக்கத்தின் தலைவரான ராம் ரஹீம் சிங் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சுனாரியா சிறையில் அடைக்கப்பட்ட ராம் ரஹீம் மீதான கொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது. இந்த விசாரணைக்காக ராம் ரஹிம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர் ஆவார் என்று தெரிகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு சிர்சாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்திரபதி மற்றும் தேரா சச்சா சவுதா இயக்கத்தின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் ஆகியோர் ராம் ரஹீமின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஏற்கெனவே ராம் ரஹீம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போது சிர்சாவில் கலவரம் மூண்டதால், இன்றும் அதே போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சிர்சாவில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி