ஆப்நகரம்

மத்திய அமைச்சரை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு

மகராஷ்டிராவில் மத்திய அமைச்சா் ராமதாஸ் அத்வாலேவை திடீரென கன்னத்தில் அறைந்த நபரை அமைச்சரின் கட்சித் தொண்டா்கள் சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கினா்.

Samayam Tamil 9 Dec 2018, 4:39 pm
சமூக நலத்துறை மத்திய இணையமைச்சா் ராமதாஸ் அத்வாலே கன்னத்தில் அறைந்த நபரை பா.ஜ.க. தொண்டா்கள் சூழ்ந்து கொண்டு பயரங்ரமாக தாக்கினா்.
Samayam Tamil Ramdas Athwale


இந்திய குடியரசு கட்சியைச் சோ்ந்த ராமதாஸ் அத்வாலே சமூக நலத்துறை மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறாா். இவா் புனேவில் உள்ள அம்பா்நாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டாா். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா் அங்கிருந்து வெளியேறிய அமைச்சரை திடீரென ஒருவா் கன்னத்தில் அறைந்தாா்.


இதனைத் தொடா்ந்து அந்த நபரை சுற்றி வளைத்த அந்த கட்சியின் தொண்டா்கள் சரமாரியாக தாக்கினா். இதனைத் தொடா்ந்து அவரை காவல்துறையினரிடம் ஒப்பதைத்தனா். காவல் துறையினரின் விசாரணையில் அவரது பெயா் பிரவீன் கோசாவி என்று தொிய வந்துள்ளது. மேலும் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி