ஆப்நகரம்

உத்திர பிரதேச ஆளுநராக அனந்தி பென் பட்டேல் நியமனம்

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 20 Jul 2019, 4:27 pm
நாட்டின் சில மாநிலங்களில் பதவி வகிக்கும் ஆளுநர்களை இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil ananthi ben


அவ்வகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் ஆளுநர் லால் ஜி தான்டன் மத்திய பிரதேசம் மாநிலத்தின் கவர்னராக மாற்றன் செய்யப்பட்டுள்ளார். பீகாரின் புதிய ஆளுநராக பாகு சவுஹான், நாகலாந்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி, திரிபுரா மாநிலத்தில் புதிய ஆளுநராக ரமேஷ் பய்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் ஹிமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எங்களுடைய அரசு சூட்கேஸ் அரசல்ல- நிர்மலா சீதாராமன் கிண்டல் கமெண்ட்
பாஜகவின் மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா மூன்று முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். கடந்த 2014ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் டியோரியா தொகுதியில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் நியாஸ் அகமதுவை விட சுமார் 2லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

சிறுகுறு தொழில்துறையின் கேபினட் அமைச்சராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி விலகினார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக பதவி விலகிய அவர், கடந்த ஆகஸ்டு 2018 வரை நாட்டின் பாதுகாப்பு நிலைக்குழுவில் உறுப்பினராக பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கல்ராஜ் மிஸ்ரா போட்டியிடவில்லை. இந்த சூழலில் அவரை ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் முன்னதாக உத்தரவிட்டார்.

ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிட மாற்றம் செய்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி