ஆப்நகரம்

மத்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் திடீர் ராஜினாமா!

மத்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ரஞ்சித் குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

TNN 20 Oct 2017, 3:06 pm
டெல்லி: மத்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ரஞ்சித் குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Samayam Tamil ranjit kumar resigns as solicitor general of india
மத்திய அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் திடீர் ராஜினாமா!


இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடன் கடிதம் அளித்துள்ள ரஞ்சித் குமார், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், தனது குடும்பத்தினரின் உடல்நலக்குறைபாடு காரணமாக, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்மூலம் அவர்களுடன் கூடுதல் நேரம் செலவிட முடியும் என்றும் கூறியுள்ளார். இதுவரை துணைத் தலைமை வழக்கறிஞராக இருந்த அனுபவம் மிகச்சிறப்பாக அமைந்தது. மத்திய அரசு தன்னை நடத்திய விதமும் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார்.

சட்ட நிபுணரான ரஞ்சித் குமார், பாஜக மத்தியில் பதவியேற்ற பின், 2014ல் துணைத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு சார்பில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் ரஞ்சித் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகியுள்ளார்.

Ranjit Kumar resigns as Solicitor General of India.

அடுத்த செய்தி