ஆப்நகரம்

சாகும் முன், பலாத்காரம் செய்த கொடூரனை அடையாளம் காட்டிய இளம்பெண்

கடந்த 4 மாதங்களாக உறவினரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண், தன்னை சித்ரவதை செய்த கொடூரனை அடையாளம் காட்டிவிட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 27 Jun 2017, 12:42 pm
குருகிராம்: கடந்த 4 மாதங்களாக உறவினரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண், தன்னை சித்ரவதை செய்த கொடூரனை அடையாளம் காட்டிவிட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil raped by uncle for 4 months girl tells cops before death
சாகும் முன், பலாத்காரம் செய்த கொடூரனை அடையாளம் காட்டிய இளம்பெண்


பட்டொடி பகுதியைச் சேர்ந்த நபர், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துடன் சுமார் 10 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குர்கானில் வசிக்கும் இளம்பெண் கடந்த சனிக்கிழமையன்று காணாமல்போனார். மறுநாள் வீடு திரும்பிய இளம்பெண், உறவுக்காரர் தன்னை ஒர் குடிசைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அத்துடன் தனக்கு விஷம் கொடுத்துவிட்டதாகவும் அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையிடம் நடந்த சம்பவத்தை கூறிய அப்பெண், கடந்த 4 மாதங்களாக உறவினர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தினார். இது குறித்து வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதால் எதுவும் கூறவில்லை என கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இதில் தொடர்புடைய அந்த நபரை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் விஷம் அருந்தி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது பாலியல் குற்ற வழக்கில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

A 17-year-old girl, allegedly raped on several occasions by her uncle over the last four months and poisoned by him on Saturday night, died in hospital on Sunday morning but named her tormentor in a statement to the police before that.

அடுத்த செய்தி