ஆப்நகரம்

வானில் நிகழப் போகும் ஆச்சரியம்; மீண்டும் பார்க்க 30 வருஷம் ஆகுமாம்!

ஒரே மாதத்தில் இருமுறை நிகழக்கூடிய ஆச்சரியம் வானில் தென்படப் போகிறது. இதனை தவறாமல் பார்த்து விடுங்கள்.

Samayam Tamil 30 Oct 2020, 11:48 am
ப்ளூ மூன் என்றால் என்ன? இது எப்போது நிகழும்? இந்த நாளில் நிலவின் வண்ணம் நீல நிறத்தில் காணப்படுமா? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இங்கே விரிவாக காணலாம்.
Samayam Tamil rare blue moon event happen on october 31st
வானில் நிகழப் போகும் ஆச்சரியம்; மீண்டும் பார்க்க 30 வருஷம் ஆகுமாம்!


ப்ளூ மூன் என்றால் என்ன?

ப்ளூ மூன் எனப்படும் நிகழ்வு நடப்பு அக்டோபர் 2020ல் நடக்கப் போகிறது. அதாவது ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்பட்டால், அதில் இரண்டாவதாக வரும் முழு நிலவிற்கு ப்ளூ மூன் (Blue Moon) என்று பெயர். கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முழு நிலவு தென்பட்டது. அதன்பிறகு நாளை (அக்டோபர் 31) முழு நிலவு வானில் தெரியப் போகிறது.

இன்னும் 30 ஆண்டுகள் வெயிட்டிங்

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் அரிதான நிகழ்வாக ஒரே மாதத்தில் இருமுறை முழு நிலவு தென்படும். அதுவும் நடப்பு மாதத்தில் நிகழ்வது முக்கியத்துவம் பெறுகிறது. கடைசியாக ஒரு மாதத்தில் 30 நாட்களுக்குள் நிகழ்ந்த ப்ளூ மூன் ஆனது, கடந்த ஜூன் 30, 2007ல் நடந்தது. இனிமேல் வரும் செப்டம்பர் 30, 2050ல் தான் ப்ளூ மூன் நிகழ்வை பார்க்க முடியும். அதற்கு இன்னும் 30 ஆண்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ மூன் எப்படி வருகிறது?

நிலவு பூமியைச் சுற்றி வர ஒருமாதம் எடுத்துக் கொள்கிறது. இதைச் சரியாக சொல்ல வேண்டுமானால் 29.531 நாட்கள் ஆகும். அதாவது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடங்கள், 38 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூடுதல் நேரம் காரணமாகவே ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு தென்படுகிறது. இது ஓராண்டில் கூடுதலாக ஒரு முழு நிலவிற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. வழக்கமாக ப்ளூ மூன் நிகழ்வின் முதல் முழு நிலவு மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் நாள் ஏற்படும்.


26 ஆண்டுகளில் இல்லாத ஷாக்; தாக்குப் பிடிக்குமா டெல்லி?

31 நாட்களில் ப்ளூ மூன் நிகழ்வு

பிடிஐ செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, 31 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு ப்ளூ மூன்கள் கடந்த 2018ஆம் ஆண்டு தென்பட்டுள்ளன. முதல் நிகழ்வு ஜனவரி 31ஆம் தேதியிலும், இரண்டாவது நிகழ்வு மார்ச் 31லும் நிகழ்ந்துள்ளது. அடுத்த ப்ளூ மூன் வரும் ஆகஸ்ட் 31, 2023ல் நடக்கும் என்று மும்பையில் உள்ள நேரு பிளானடோரியத்தின் இயக்குநர் அரவிந்த் பரஞ்பாயே தெரிவித்துள்ளார்.

ஆச்சரியமூட்டும் நிகழ்வா?

ப்ளூ மூன் நிகழ்வின் போது நிலவின் வண்ணத்தில் எந்தவித மாறுபாடும் தென்படாது. வழக்கத்தை விட கூடுதலாக ஒரு முழு நிலவு தெரிவது தான் இதன் சிறப்பு. இதை ஆச்சரியமான ஒன்றாக யாரும் கொண்டாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி