ஆப்நகரம்

அரசு மருத்துவனையில் நோயாளியின் கண்ணை குதறிய எலி!

மும்பை அரசு மருத்துவமனை கோமாவில் இருந்த நோயாளியின் கண்ணை எலி கடித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 30 Apr 2018, 1:59 am
மும்பை அரசு மருத்துவமனை கோமாவில் இருந்த நோயாளியின் கண்ணை எலி கடித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil Tamil_News_large_2010648


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பால் தாக்கரே அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த பர்மிந்தர் குப்தா என்ற 27 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்த அவரை சில நாட்களுக்கு முட்பு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். அங்கே அவரது வலது கண் ஓரத்தில் எலி கடித்து காயப்படுத்தியுள்ளது. பர்மிந்தர் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்த அவரது தந்தை மருத்துவர்களிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

முந்தைய நாள் இரவுதான் மருத்துவமனைக்குள் எலிகள் அதிகம் உலவுலது குறித்து புகார் தெரிவித்ததாகவும் மறுநாள் மகனின் கண்ணில் எலி கடித்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து, விசாரிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

அடுத்த செய்தி