ஆப்நகரம்

சிறுபான்மையினரின் கல்வி உரிமையை மறுக்கும் பாஜக - ரவிக்குமார் எம்.பி. கண்டனம்!

எஸ்சி, எஸ்டி சமூகங்களின் கல்வி உரிமையைப் பறிப்பதுபோலவே சிறுபான்மையினரின் கல்வி உரிமையும் பாஜக அரசால் மறுக்கப்படுவதாக ரவிக்குமார் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்

Authored bySM Prabu | Samayam Tamil 11 Dec 2022, 10:46 am
மௌலானா ஆஸாத் தேசிய ஃபெல்லோஷிப் திட்டத்தை( MANF) நிறுத்தக்கூடாது எனவும், சிறுபான்மையின மாணவர்களுக்கான அந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனவும் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil ரவிக்குமார் எம்.பி.
ரவிக்குமார் எம்.பி.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், பௌத்தர் உள்ளிட்ட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை 9, 10 வகுப்புகளுக்கு மட்டும்தான் என பாஜக அரசு சுருக்கி விட்டது. அது சிறுபான்மை மதத்தவரின் பள்ளிக் கல்வியின்மீது மிகப்பெரிய தாக்குதலாகும்.

இப்போது சிறுபான்மை மதத்தவரின் உயர் கல்வி மீது அடுத்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கல்விக்கென கொடுக்கப்பட்டு வந்த மௌலானா ஆஸாத் தேசிய ஃபெல்லோஷிப் திட்டம் ( MANF) முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. பிஎச்டி ஆய்வு மேற்கொள்ளும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் CSIR- UGC- NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாயும் எஞ்சிய 3 ஆண்டுகளுக்கு மாதம் 28 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.

மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் இடையே வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
சச்சார் குழு பரிந்துரையும் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்திய அளவில் ஆண்டுக்கு சுமார் 1200 மாணவர்கள் இதனால் பயனடைந்து வந்தனர். அதைத்தான் இப்போது பாஜக அரசு நிறுத்தியுள்ளது.

எஸ்சி, எஸ்டி சமூகங்களின் கல்வி உரிமையைப் பறிப்பதுபோலவே சிறுபான்மையினரின் கல்வி உரிமையும் பாஜக அரசால் இப்போது மறுக்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவர்களுக்கு எதிரான இந்த முடிவை ஒன்றிய பாஜக அரசு கைவிடவேண்டும். MANF திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி