ஆப்நகரம்

வருகிறது புதிய 350 ரூபாய் நாணயம்

குரு கோபிந்த் சிங் ஜி.,யின் 350 வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Mar 2018, 4:39 pm
புதுடெல்லி : குரு கோபிந்த் சிங் ஜி.,யின் 350 வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Samayam Tamil RBI


குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்கள், நோட்டுக்கள் தயாரிப்பதை விட தற்போது அதிக மதிப்பெண் கொண்ட ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை தயாரிக்க மத்திய ரிசர்வ் வங்கி ஆர்வம் காட்டி வருகின்றது.

அந்த வகையில் குரு கோபிந்த் சிங் ஜி.,யின் 350வது பிறந்த நாள் முன்னிட்டு 350 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நாணயம் 44 மிமீ விட்டமும், அலாய் சில்வர்(50 சதவீதம்), செம்பு (40 சதவீதம்), நிக்கல் (05 சதவீதம்), மற்றும் துத்தநாகம் (5 சதவீதம்) சேர்க்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி