பிரவாசி பாரதிய திவாஸ் கன்வென்ஷனின் 16ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்கொண்டிருக்கிறது. அதில் இந்தியாவில் தான் குறைந்தபட்ச உயிரிழப்புகள் பதிவாகியிருக்கின்றன. உலகமே வியக்கும் வண்ணம் அதிகப்படியானோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உலக மக்கள் அனைவரையும் காப்பதற்காக இந்தியா தயாராகிவிட்டது. ஒன்றல்ல. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இது நமது நாட்டிற்கு மட்டுமல்ல.
ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் வரப்பிரசாதமாக இருக்கும். உலகில் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு மிக முக்கிய பங்குண்டு. மனிதர்களை காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இது கடந்த காலங்களில் மட்டுமல்ல. தற்போதும் தொடர்ந்து வருகிறது.
கோவாக்சின் தடுப்பூசியும், தன்னார்வலர் மரணமும் - பரபரப்பூட்டும் பின்னணி!
இந்தியா சுதந்திரம் அடைந்த போது பலரும் நம்மை பார்த்து ஏளனம் செய்தனர். அதாவது ஏழைகளும், படிப்பறிவு இல்லாதவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர். இதன்மூலம் அனைவரையும் ஒருங்கிணைப்பதோ, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதோ சாத்தியமில்லை என்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இந்தியா ஒற்றுமையுடன் திகழ்கிறது. ஜனநாயகம் நம்மை மிகுந்த வலிமை அடையச் செய்துள்ளது. உலகில் வேறெங்கும் காணாத அற்புதமான மனிதர்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் இந்தியர்கள், PM-CARES FUND-க்கு ஏராளமான நிதியுதவியை அளித்து கொண்டிருக்கின்றனர்.
என்னங்க இது கொடுமை?: எடப்பாடி பழனிசாமியிடம் முறையிடும் டி. ராஜேந்தர்
இது நமது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதற்காக ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் வரப்பிரசாதமாக இருக்கும். உலகில் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு மிக முக்கிய பங்குண்டு. மனிதர்களை காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இது கடந்த காலங்களில் மட்டுமல்ல. தற்போதும் தொடர்ந்து வருகிறது.
கோவாக்சின் தடுப்பூசியும், தன்னார்வலர் மரணமும் - பரபரப்பூட்டும் பின்னணி!
இந்தியா சுதந்திரம் அடைந்த போது பலரும் நம்மை பார்த்து ஏளனம் செய்தனர். அதாவது ஏழைகளும், படிப்பறிவு இல்லாதவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர். இதன்மூலம் அனைவரையும் ஒருங்கிணைப்பதோ, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதோ சாத்தியமில்லை என்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இந்தியா ஒற்றுமையுடன் திகழ்கிறது. ஜனநாயகம் நம்மை மிகுந்த வலிமை அடையச் செய்துள்ளது. உலகில் வேறெங்கும் காணாத அற்புதமான மனிதர்கள் இந்தியாவில் வசித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் இந்தியர்கள், PM-CARES FUND-க்கு ஏராளமான நிதியுதவியை அளித்து கொண்டிருக்கின்றனர்.
என்னங்க இது கொடுமை?: எடப்பாடி பழனிசாமியிடம் முறையிடும் டி. ராஜேந்தர்
இது நமது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதற்காக ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.