அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக தீவிரமடைந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தாக்டே (Tauktae) என்று பெயர் சூட்டப்படும். இதையடுத்து வடக்கு - வடமேற்கு திசையில் குஜராத் மற்றும் பாகிஸ்தான் கடலோரப் பகுதிகளை நோக்கி புயல் நகரக்கூடும். வரும் 18ஆம் தேதி குஜராத் கடலோரப் பகுதிகளை சென்றடையும் என்று தெரிகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தினம்திட்டா மற்றும் லட்சத்தீவுகளுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது. இதேபோல் எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளைய தினம் வடக்கு கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மேலும் 7 மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவுகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நீங்க நல்லா இருக்கோணும்: சூர்யா, கார்த்தி, சிவகுமாரை வாழ்த்தும் ரசிகர்கள்
அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வரை செல்லும். மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். ஒரு மீட்டர் உயரம் எழும்பக் கூடும். எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கனமழை காரணமாக திருவனந்தபுரத்தில் தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்தவர்கள் நாளை போட்டுக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாளைய தினம் வடக்கு கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மேலும் 7 மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவுகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நீங்க நல்லா இருக்கோணும்: சூர்யா, கார்த்தி, சிவகுமாரை வாழ்த்தும் ரசிகர்கள்
அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வரை செல்லும். மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். ஒரு மீட்டர் உயரம் எழும்பக் கூடும். எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கனமழை காரணமாக திருவனந்தபுரத்தில் தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்தவர்கள் நாளை போட்டுக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.