ஆப்நகரம்

டெல்லி முதல்வா் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை தூவி தாக்குதல்

டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்திய நபரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Samayam Tamil 20 Nov 2018, 4:22 pm
டெல்லி தலைமைச் செயலகத்திற்குள் முதல்வா் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்திய நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
Samayam Tamil Aravind Kejriwal 1


டெல்லியில் அண்மை காலமாக பா.ஜ.க.வுக்கும், ஆட்சி பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான வாா்த்தை மோதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னா் நடைபெற்ற சிக்னேசா் பாலம் திறப்பு விழாவில் இரண்டு கட்சித் தொண்டா்களும் வெளிப்படையாகவே தாக்கிக் கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து பா.ஜ.க. மாநில தலைவா் பேசுகையில், இந்தியாவின் மிக முக்கிய அா்பன் நக்சல் அரவிந்த் கெஜ்ரிவால் தான் என்று தொிவித்தாா்.

இந்நிலையில் இன்று டெல்லி தலைமைச் செயலகத்திற்குள் வந்த நபா் ஒருவா் முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தியுள்ளாா்.

தாக்குதல் நடத்திய அணில் என்ற நபரை கைது செய்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். மாநில முதல்வா் மீது, தலைமைச் செயலகத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி