ஆப்நகரம்

நீரவ் மோடி சகோதரிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்த சர்வதேச போலீஸ்..!!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீரவ் மோடியின் சகோதிரிக்கு சர்வதேச காவல் துறை ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Samayam Tamil 10 Sep 2018, 4:42 pm
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நீரவ் மோடியின் சகோதிரிக்கு சர்வதேச காவல் துறை ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
Samayam Tamil DmtsOpaU0AEXOZY
நீரவ் மோடி சகோதரிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்..!!


ரூ. 12 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக பெற்று மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது.

நாட்டிலிருந்து வெளியேறிய அவரை பிடிக்க சர்வதேச காவல்துறை உதவியுடன் பிடிக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கடன் மோசடி விவகாரத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடியையும் பிடிக்கவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சர்வதேச போலீசார் சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் பிறப்பித்து பூர்வி மோடியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தியாவின் நீதித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், இண்டர்போல் காவலர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

அடுத்த செய்தி