ஆப்நகரம்

10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பெண் காவலர் ரேகா மிஸ்ரா!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க வழிவகுத்த பெண் காவலர் ரேகா மிஸ்ரா பற்றிய பாடம், 10-ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது அம்மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 13 Jun 2018, 10:46 am
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க வழிவகுத்த பெண் காவலர் ரேகா மிஸ்ரா பற்றிய பாடம், 10-ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது அம்மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil rek
10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பெண் காவலர் ரேகா மிஸ்ரா!


மகாரஷ்டிரா மாநிலம், ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருபவர் ரேகா மிஸ்ரா(32). முதன் முதலில் அலகாபாத் ரயில்வே நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு மகாரஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் ஆதரவின்றி சுற்றி திரிந்த சுமார் 1,150 குழந்தைகள் மீட்கப்பட்டன. அவர்களில் 434 குழந்தைகள், தங்களின் பெற்றோர்களுடன் சேருவதற்கு காவலர் ரேகா உறுதுணையாக இருந்தார்.

பெற்றொர் இல்லாத குழந்தைகளை, மறுவாழ்வு மையங்களில் சேர்த்து அவர்களுக்கு, உணவு, கல்வி என தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். இதேபோல கடந்த 2017-ஆம் ஆண்டு ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 500 குழந்தைகளை மீட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.


காவலர் ரேகா மிஸ்ராவின் இந்த சேவையை பாராட்டி ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வருடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் காவலர் ரேகா மிஸ்ரா பற்றிய தகவல்கள் பாடங்களாக இடம் பெற்றுள்ளது.


இதுகுறித்து அவர் கூறுகையில், `நான் இதுவரை 953 குழந்தைகளுக்கு உதவியுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகத் தினமும் நாங்கள் செய்யும் செயல்கள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாடப் புத்தகத்தில் எங்களின் செயல் இடம் பெற்றதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியும்.” என்று கூறினார்.

இந்த நிலையில் பல குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க வழிவகுத்த பெண் காவலர் ரேகா மிஸ்ரா குறித்து, பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ளது அம்மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி