ஆப்நகரம்

புல்வாமா வீரர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, வேலை: ரிலையன்ஸ் அறிவிப்பு

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு இயன்றவரை சிறப்பான சிகிச்சையை வழங்குகிறோம் எனவும் வீரர்களின் நலனுக்காக அரசு அறிவுறுத்தும் வேறு எந்த உதவியையும் செய்ய ஆயத்தமாக உள்ளோம் எனவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2019, 6:19 pm
ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil nita-and-mukesh-ambani


ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ தயாராக இருப்பதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை முழுமையாக ஏற்பதுடன் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியையும் அளிக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.


தேவைப்பட்டால் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மருத்துவமனையில் காயமடைந்த வீரர்களுக்கு இயன்றவரை சிறப்பான சிகிச்சையை வழங்குகிறோம் எனவும் வீரர்களின் நலனுக்காக அரசு அறிவுறுத்தும் வேறு எந்த உதவியையும் செய்ய ஆயத்தமாக உள்ளோம் எனவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதல் : கிரிக்கெட் வீரர் சேவாக் செய்த செயலால் குவியும் பாராட்டு

ரிலையன்ஸ் அறக்கட்டளை அனில் அம்பானியில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பு ஆகும்.

அடுத்த செய்தி