ஆப்நகரம்

ஆகஸ்ட் 16ஆம் தேதி அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு: அரசு அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வருகிற 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 11 Aug 2020, 9:33 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு முழுவதும் முடக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், கோயில்கள் உள்பட மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. வழக்கமாக பூஜைகள் கோயில்களில் நடைபெற்ற போதும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil வைஷ்னவ தேவி ஆலயம்
வைஷ்னவ தேவி ஆலயம்


தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், நாடு முழுவதும் UNLOCK செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலின் இதனை பின்பற்றி வரும் மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வருகிற 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள்ள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை தங்களது செல்போனில் கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். சிலைகளை, புனித புத்தகங்களை தொடுவதற்கு அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வைஷ்னவ தேவி ஆலயத்தில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நாள்தோறும் 5000 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர் என்றும் ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்த அடுத்தகட்ட தளர்வு: இதற்கெல்லாம் அனுமதி!

முன்னதாக, தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் 10,000 ரூபாய்க்கு கீழ் மாத வருமானம் வரும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இயங்கவும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி