ஆப்நகரம்

வரி செலுத்தும் மக்களின் அச்சம் நீக்கும்படி பிரதமர் மோடி அறிவுரை

நாட்டில் உள்ள வரி செலுத்துவோரிடையே நிலவும் அச்சத்தை நீக்க, வருமான வரித்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

TNN 16 Jun 2016, 6:53 pm
நாட்டில் உள்ள வரி செலுத்துவோரிடையே நிலவும் அச்சத்தை நீக்க, வருமான வரித்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
Samayam Tamil remove fear of harassment among taxpayers pm tells tax officials
வரி செலுத்தும் மக்களின் அச்சம் நீக்கும்படி பிரதமர் மோடி அறிவுரை


தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வரி செலுத்துவோர் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் இதுதொடர்பாகப் பிரதமர் மோடி பேசியதாவது:

வரி மற்றும் வருவாய் சார்ந்த பணிகளை நவீனமயமாக்கும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். இது டிஜிட்டல் யுகம். இதற்கேற்ப, நிர்வாகப் பணிகளை மாற்றியமைக்க வேண்டியது அரசின் கடமையாகும். வரி செலுத்துவோரிடையே, சில தேவையற்ற அச்சம் நிலவுகிறது. இதுதொடர்பாக, விளக்கம் அளித்து, அவர்களின் சந்தேகம் மற்றும் அச்சத்தை போக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஊழியர்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் வரி வருமானமும் இயல்பாக இருக்கும். அரசு நிர்வாகப் பணிகளும் சுமூகமாக நடைபெறும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அடுத்த செய்தி