ஆப்நகரம்

பள்ளிகள் மீண்டும் மூடல்; அடுத்த ஷாக் ஆரம்பம் - மாணவர்களுக்கு எச்சரிக்கை!

கொரோனா மீண்டும் ஆட்டம் காட்டத் தொடங்கியதால் திறக்கப்பட்ட பள்ளிகள் மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Oct 2020, 9:35 am
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வருகிறது. இதையொட்டி பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர். இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளின் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.
Samayam Tamil reopened schools closed due to rising number of covid 19 cases in mizoram
பள்ளிகள் மீண்டும் மூடல்; அடுத்த ஷாக் ஆரம்பம் - மாணவர்களுக்கு எச்சரிக்கை!


தாமதமான பள்ளிகள் திறப்பு

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மாணவர்கள் எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று கருதி பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளி போடப்பட்டு வந்தது. அடுத்த கல்வியாண்டு தொடங்கியும் பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சி மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டன.

மத்திய அரசு அறிவிப்பு

இந்த சூழலில் செப்டம்பர் 21ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுச் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம் தங்கள் மாநிலங்களில் நிலவும் கொரோனா பரவலுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அரசுகளே முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கினர்.


அதுக்குள்ள பள்ளிகளை திறக்க வேண்டாம்; இனிமே தான் ஷாக் வெயிட்டிங்!

அக்டோபர் 16ல் பள்ளிகள் திறப்பு

இதைத்தொடர்ந்து 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியான வகுப்புகள் நடத்த சில மாநில அரசுகள் முடிவு செய்தன. இதற்காக ஆசிரியர்கள், மாணவர்களை பல்வேறு குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வர வைக்க ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் மிசோரம் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆகிய இரண்டு வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகள் தொடர்ச்சியாக வர அனுமதி அளிக்கப்பட்டது.

மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்

இந்நிலையில் மாநில கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே கூறுகையில், மிசோரம் மாநிலம் கோவிட்-19 தொற்று திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் சில பள்ளி மாணவர்களும் அடங்குவர். உடனே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு இருக்கிறது. எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

எப்போது பள்ளிகள் திறக்கப்படும்?

வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 26) முதல் பள்ளி விடுதிகளும் மூடப்படுகின்றன. தற்போதைய கொரோனா சங்கிலித் தொடர் உடைந்து, நிலைமை சீரடையும் பட்சத்தில் வரும் நவம்பர் 9ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் திறப்பு பற்றி திட்டமிடப்படும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்விற்கு பதிவு செய்யும் நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்

இந்த சூழலில் மிசோரம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாட்களில் மிகவும் தீவிரமாக கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அரசு அலுவலகங்களில் 70 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட வெவ்வேறு நாட்களில் அலுவலகத்திற்கு வருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். எஞ்சிய 30 சதவீதம் பேரில் இருக்கும் இளைஞர்கள் கோவிட்-19 பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.


நவம்பர் 2 முதல் ஆட் - ஈவன் முறையில் பள்ளிகள் திறப்பு!

புதிய வழிமுறைகள் அமல்

மாநிலத்தில் திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும். முன்னதாக இந்த வரம்பு 50 என்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உடற்பயிற்சி கூடங்கள், சுற்றுலா தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். விளையாட்டு பயிற்சி கூடங்கள் செயல்படலாம். உள் விளையாட்டு அரங்குகளில் அதிகபட்சமாக 10 பேர் மட்டும் பங்கேற்கலாம்.

கொரோனா நிலவரம் என்ன?

வெளி விளையாட்டு அரங்குகளில் 25 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் இதுவரை 2,447 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,194 பேர் குணமடைந்து விட்டனர். 253 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒரு மரணம் கூட நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநிலத்தில் ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே மிகக்குறைந்த எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பை கொண்ட மாநிலமாக கடைசி இடத்தில் மிசோரம் மாநிலம் இருக்கிறது.

அடுத்த செய்தி