ஆப்நகரம்

அர்னாப் கோஸ்வாமி அதிரடி கைது; போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Nov 2020, 10:16 am
பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமான கன்கார்ட் டிசைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மேலாண் இயக்குநராக இருந்தவர் அன்வய் நாயக்(53). இவர் செய்த வேலைகளுக்காக தர வேண்டிய ரூ.5.40 கோடியை அர்னாப் தரவில்லை என்று தெரிகிறது. இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு அலிபாக் அருகே காவிர் கிராமத்தில் உள்ள விவசாய வீட்டில் நாயக் மற்றும் அவரது தாயார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி மீது நாயக்கின் மனைவி அக்‌ஷதா நாயக் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil Arnab Arrest


இதுதொடர்பாக வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மே 26, 2020ல் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதில், அன்வய் நாயக்கின் தற்கொலையின் பின்னணியில் அர்னாபிற்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், அவரைக் கைது செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு அவர் போதிய சரீர இடைவெளி விட்டு நில்லுங்கள்.

நீங்க வேற மாநிலத்துக்கு வேலைக்கு போக மோடிதான் காரணம்: கொதிக்கும் ராகுல்

நான் சில விஷயங்களைப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதை ஏற்காத போலீசார் அர்னாபை வலுக்கட்டாயமாக இழத்துச் சென்றுள்ளனர். போலீஸ் வேனில் ஏற்றிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்னாப், தனது மகனை மும்பை போலீசார் தாக்கியிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவத்தால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அர்னாப் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி