ஆப்நகரம்

தாய்லாந்து குகையில் சிக்கிய 13 சிறுவர்களை மீட்கும் பணியில் உதவிய இந்திய நிறுவனம்!

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க இந்திய தனியார் நிறுவனம் உதவி செய்துள்ளது.

Samayam Tamil 11 Jul 2018, 12:48 pm
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கஇந்திய தனியார் நிறுவனம் உதவி செய்துள்ளது.
Samayam Tamil thailand-accident-cave


கடந்த ஜுன் 23-ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு கால்பந்து பயிற்சி பெறும் 12 சிறுவர்கள் கொண்ட குழு,பயிற்சியாளருடன் டிரெக்கிங் சென்றிருந்தனர்.

அப்போது, பருவமழை தீவிரமடைந்ததால் தாம் லுவாங் குகைக்குள் அந்த 13 பேரும் சிக்கிக்கொண்டனர். குகைக்குள் வெள்ள நீர் சூழ்ந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட 13 பேரால் வெளியே வரமுடியவில்லை.

இதுதொடர்பாக தாய்லாந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாயமான 13 பேரையும் மீட்கும் பணி கடந்த இருவாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.

தாய்லாந்து நாட்டு ராணுவத்தினருடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடுமையான போரட்டத்திற்குபிறகு 13 சிறுவர்களையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்புகுழுவினருக்கு இந்தியாவை சேர்ந்ததனியார் நிறுவனம் உதவி செய்துள்ளது. கிர்லோஸ்கர்பிரதர்ஸ் லிமிடட்( Kirlosker Brothers' Limited's ) என்ற நிறுவனம் இந்த மீட்பு பணியில் உதவியுள்ளது.

அடுத்த செய்தி