ஆப்நகரம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள உயா் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இன்று தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 8 Jan 2019, 1:25 pm
சாதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை போன்று பொருளாதாரத்தின் அடிப்படையிலும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய சட்டமசோதாவை மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil Narendra Modi 12


நாடு முழுவதும் தற்போது வரை சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இடஒதுக்கீடு தொடா்பான இருவேறு கருத்துகள் இருந்து வருகின்றன.

மக்களவைக்கான தோ்தல் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு புதிதாக பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இடஒதுக்கீடு என்பது 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் புதிய சட்டம் இயற்றும் முயற்சியல் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதன்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள உயா் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சா் தாவா் சந்த் கெலாட் இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளாா். இதனைத் தொடா்ந்து இந்த மசோதா நாளை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது,

அடுத்த செய்தி